sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி

/

வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி

வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி

வாய்க்காலில் குளித்த தி.மு.க., நிர்வாகி நீரில் மூழ்கி பலி


ADDED : அக் 16, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் நண்பருடன் வாய்க்காலில் குளித்த தி.மு.க., பிரமுகர் நீரில் மூழ்கி இறந்தார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் மகன் திராவிடதாசன்,31; பட்டதாரியான இவர் தி.மு.க., குமராட்சி ஒன்றிய, பொறியாளர் துணை அமைப்பாளராக பதவி வகித்தார்.

சிதம்பரம் அடுத்துள்ள சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நண்பருடன் குளிக்க சென்றார். அப்போது வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக இருந்துள்ளது.

நண்பர் வருவதற்கு முன்பே திராவிடதாசன் வாய்க்காலில் இறங்கிய போது நீரோட்டத்தின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் இரவு 9.00 மணி வரை தேடியும் கிடைக்காததால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி துவங்கியது. பிற்பகலில் திராவிடதாசன் உடலை மீட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us