/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 06:17 AM

கடலுார் : கடலுாரில் மாநகர தி.மு.க., சார்பில் மாநில அரசை மதிக்காத தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும், கவர்னரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, சரவணன், நந்தகோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாநகர துணை செயலாளர் அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலாளர்கள் சலீம், நடராஜன் முன்னிலை வகித்தனர். மாநில அரசை மதிக்காத தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தியும், கவர்னரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, தொ.மு.ச., மண்டல செயலாளர் தங்க ஆனந்தன், மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.