ADDED : மே 20, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று பேரளையூர், நேமம் கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேரளையூர் தெற்கு தெரு பாலு, 38; நேமம் மெயின் ரோடு கொளஞ்சி,75; ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
இதே போன்று, கார்குடல் பகுதியில் கள்ளத் தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தேன்மொழி, 65; என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 25 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.