/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது
/
மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது
ADDED : நவ 16, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் நேற்று எம்.பரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதேபகுதியைச்சேர்ந்த கந்தசாமி, 74; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கந்தசாமியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

