ADDED : மே 07, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில், கடந்த 2ம் தேதி 65 வயது மதிக்க தக்க முதியவர் மயங்கி விழுந்து கிடந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதியவர் கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து வி.ஏ.ஓ., ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.