ADDED : நவ 20, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை முன்பு மயங்கி கிடந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் அரசு மருத்துவமனை முன்பு கடந்த 2ம் தேதி மாலை, 80வயது மதிக்க தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அந்த முதியவரின் பெயர் பாவாடை என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை. சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று காலை 7:30 மணியளவில் உயிரிழந்தார்.
வி.ஏ.ஓ.,சவுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

