ADDED : நவ 02, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: ஆற்று நீரில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த செம்பேரி காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 70; நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
நேற்று பகல் 12:30 மணியளவில் அப்பகுதி இளைஞர்கள் அருகிலுள்ள வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட மணல் எடுக்கப்பட்ட பள்ளத்தில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது காணாமல் போன ராஜமாணிக்கம் இறந்த நிலையில் மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

