ADDED : டிச 31, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி இறந்தார்.
வரக்கால்பட்டை சேர்ந்தவர் கேசம்மாள், 75; இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில் கேசம்மாள் படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

