நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அறிவு திருக்கோவில் மனவளக்கலை மன்றம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.
நிர்வாகிகள் ராணி, ராஜேந்திரன், சீனிவாசன், கொளஞ்சி, கருணாகரன், ராஜரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், மனவளக்கலை மன்றத்திற்கு புதிய அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

