ADDED : அக் 23, 2025 12:52 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி மெயின் ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சாந்தி,60; உடல் நலக்குறைவால் இறந்தார்.
தகவல் அறிந்த சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகத் தலைவர் ராமச்சந்திரன், அரிமா சங்க மாவட்ட தலைவர் ரத்தின சுப்பிரமணியன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் பக்தாரம், பாபுலால், பிரகாஷ், கண் தானம் கமிட்டி குழுவினர் மகாலிங்கம், துரைராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், உறவினர்கள் ஒப்புதலுடன், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
