/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாமின் கிடைக்காதவர்களுக்கு ஆதரவாக போலி வி.ஏ.ஓ., அடையாள அட்டை தயாரிப்பு
/
ஜாமின் கிடைக்காதவர்களுக்கு ஆதரவாக போலி வி.ஏ.ஓ., அடையாள அட்டை தயாரிப்பு
ஜாமின் கிடைக்காதவர்களுக்கு ஆதரவாக போலி வி.ஏ.ஓ., அடையாள அட்டை தயாரிப்பு
ஜாமின் கிடைக்காதவர்களுக்கு ஆதரவாக போலி வி.ஏ.ஓ., அடையாள அட்டை தயாரிப்பு
ADDED : ஏப் 24, 2025 07:29 AM

பெண்ணாடம்:: போலியாக வி.ஏ.ஓ., அடையாள அட்டை தயாரித்து, முறைகேடாக பயன்படுத்திய வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம், சோழன் நகரை சேர்ந்தவர்கள் மணிவாசகம், வேணுகோபால். இருவரது குடும்பத்திற்கும் முன்விரோதம் உள்ளது.
கடந்த மாதம் 3ம் தேதி வேணுகோபால் மகன் சின்னராஜாவிற்கு திருமண ஊர்வலம் நடந்தது. அப்போது, மணிவாகசம் மற்றும் இவரது மகன்கள், உறவினர்கள் 12 பேர் சின்னராஜாவின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தாய் ராஜசுலோச்சனா உள்ளிட்டோரை தாக்கினர். இது தொடர்பாக 12 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மணிவாசகம், சத்தியசீலன் ஆகிய இருவரை கைது செய்து, 10 பேரை தேடி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த ராஜசுலோச்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், தலைமறைவாக உள்ள 10 பேருக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக, பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி நீலமேகம் மகன் விக்னேஷ்வரன், 27, என்பவர், ராஜசுலோச்சனாவை பார்க்க நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அவர், 'கலெக்டர் ஆபீசில் இருந்து விசாரணைக்கு வந்துள்ளேன். ராஜசுலோச்சனாவை ஏன் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை' என, உடனிருந்த உறவினர் சோழன் நகர் அன்பு என்பவரிடம் கேட்டார். வி.ஏ.ஓ.,வாக வேலை பார்க்கிறேன் எனக்கூறி, மொபைலில் வைத்திருந்த அடையாள அட்டையை காட்டிவிட்டு புறப்பட்டார்.
சந்தேகமடைந்த அன்பு அளித்த தகவலின்பேரில், பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று விக்னேஸ்வரனை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவரது தந்தை நீலமேகம் வி.ஏ.ஓ., பணியில் இருந்தபோது இறந்து விட்டார். பெண்ணாடத்தில் டிஜிட்டல் கடை வைத்துள்ள சோழன் நகர் அன்பழகன் மகன் பாரதி, 22, உதவியுடன் போலி அடையாள அட்டை தயாரித்தது தெரிய வந்தது.
அதையடுத்து விக்னேஷ்வரன், பாரதி ஆகிய இருவரையும் கைது செய்து, போலி அடையாள அட்டை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

