ADDED : ஆக 29, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 33; இவரது மனைவி கீர்த்திகா, 28; கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1 மகன், 1 மகள் உள்ளனர். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கீர்த்திகா தனது குழந்தைகளுடன் தாய் வீடான கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார்.
இதனால், மனமுடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.