ADDED : அக் 29, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 79; விவசாயி.
இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் நடவு செய்துள்ள நெல் வயலுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை போட்ட போது, மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

