sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை

/

 கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை

 கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை

 கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை


ADDED : நவ 21, 2025 05:38 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி நெல் விவசாயிகள் கோனோவீடர் கருவி வழங்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி மற்றும், குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் இயந்திர நடவு மூலம் நெல் மகசூல் செய்கின்றனர்.

ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் சிறு, குறு விவசாயிகள் கூட தற்போது இந்த முறைக்கு மாறி வருவதாக கூறுகின்றனர்.

இயந்திர நடவு செய்யும் நெல் விவசாயிகளுக்கு களையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. களையை கட்டுப்படுத்தும் கோனோவீடர் கருவி பயன்படுத்தினால், களை மண்ணுக்குள்ளேயே மக்கி, நிலத்திற்கு எருவாக அமைகின்றது.

குறிஞ்சிப்பாடி வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி வட்டார விவசாயிகளுக்கு மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி, பாண்டு, கடப்பாரை மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் தாங்களாக தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் கோனோவீடர் கருவிகளை பெற்று, தங்கள் நெல் வயல்களில் களை எடுக்கின்றனர். ஆனால் அவற்றை கொண்டு அனைத்து விவசாயிகளும் பயனடைய முடியவில்லை என, அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், குறிஞ்சிப்பாடி வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதுமான கோனோவீடர் கருவிகளை வழங்க முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us