sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாசன வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

/

பாசன வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

பாசன வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை

பாசன வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : செப் 20, 2025 07:21 AM

Google News

ADDED : செப் 20, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை துார்வாராததால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி லால்பேட்டை வரை 28 நேரடி வாய்க்கால்கள், ஏராளமான கிளைவாய்க்கால்கள் உள்ளன. வீராணம் ஏரி மூலமாக கீரப்பாளையம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய வட்டாரங்களில் 50 ஆயிரம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா நாற்றுவிடும் பணி நடக்கிறது. இதேப் போன்று, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி ஆகிய வட்டாரங்களில் நேரடி நெல்விதைப்பு செய்து வருகின்றனர்.

ஏரியின் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், கடைகோடியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us