ADDED : ஏப் 06, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் அணி மாநில செயலாளர் வீரமணி கண்டன உரையாற்றினார்.
அமைப்பு செயலாளர் சதாசிவம், ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய இளைஞரணி செய லாளர் ஹரிதாஸ், ஏழுமலை, செங்குட்டுவன், ஞானப்பழம், திருமேனி உட்பட பலர் பங்கேற்றனர்.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'முல்லைப் பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும்' என்ற வாசகத்தை நீக்க வேண்டும்.
இத்திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

