sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை

/

 வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை

 வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை

 வயல்களில் மழைநீர் தேக்கம் விவசாயிகள் கவலை


ADDED : நவ 25, 2025 05:12 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: தொடர் மழையால் மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றிய பகுதிகளில் பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டதின் கடைக்கோடியில் உள்ள மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இதில், பெரியநெசலுார், விளாம்பாவூர், அடரி, மாங்குளம், சிறுபாக்கம், மங்களூர் உள்ளிட்ட 70 கிராமங்களில் ஆண்டுதோறும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், கேழ்வரகு, பருத்தி, மணிலா, கிணற்று நீர் பாசனம் மூலம் மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நடப்பாண்டில், மக்காச்சோளம், கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மழைநீர் வயல்களில் தேங்கி நிற்பதால், சாகுபடி செய்த பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.

உழவு, உரம், கூலி ஆட்கள் செலவு செய்து, அதிக மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்த்த நிலையில், மழைநீர் தேங்கி நிற்பதால் மகசூல் பாதிக்கப்படும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us