நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : குடும்ப தகராறு காரண மாக பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி செல்வி, 34; இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த செல்வி நேற்று, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.