/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அங்காளம்மன் கோவிலில் கொடியேற்றம்
/
கடலுார் அங்காளம்மன் கோவிலில் கொடியேற்றம்
ADDED : மார் 02, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருப்பாதிரிபுலியூர் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை உற்சவ கொடியேற்றம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிபுலியூர் வண்டிப்பாளையம் ரோடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா வரும் 9ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நேற்று கொடியேற்றம் உற்சவம் நடந்தது. காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவ கொடி ஏற்பட்டு மகா தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

