/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி ஊராட்சி தலைவர் தர்ணா பி.டி.ஓ., ஆபீசில் பரபரப்பு
/
மாஜி ஊராட்சி தலைவர் தர்ணா பி.டி.ஓ., ஆபீசில் பரபரப்பு
மாஜி ஊராட்சி தலைவர் தர்ணா பி.டி.ஓ., ஆபீசில் பரபரப்பு
மாஜி ஊராட்சி தலைவர் தர்ணா பி.டி.ஓ., ஆபீசில் பரபரப்பு
ADDED : அக் 09, 2025 02:15 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தர்ணா செய்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த மாத்துார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்ரமணியன். இவர், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று மாலை 4:00 மணியளவில், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, 2023 - 24ல், 15வது நிதிக்குழு திட்டத்தில் 36 மீட்டருக்கு 1.16 லட்சத்தில் செம்மண் ஜல்லி சாலை அமைத்தேன்.
அனுமதி கொடுத்த புக் தொலைந்து விட்டதாக கூறி பணம் தராமல் காலம் தாழ்த்துகின்றனர் என தெரிவித்தார். அவரிடம் பி.டி.ஓ.,க்கள் லட்சுமி, சங்கர், சப் இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து 15 நாட்களுக்குள் நேரில் விசாரணை நடத்தப்படும்.
அதில், முறையாக பணிகள் நடந்திருந்தால், அதற்குரிய நிதியை கலெக்டரிடம் அனுமதி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையேற்காத சுப்ரமணியன் அங்கிருந்து வெளியேறினார்.
இதனால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.