/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி கோவிலில் கருட பஞ்சமி பூஜை
/
புத்தேரி கோவிலில் கருட பஞ்சமி பூஜை
ADDED : ஜூலை 30, 2025 07:40 AM

திட்டக்குடி : புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், கருட பகவானுக்கு கருட பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.
திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், கருட பகவானுக்கு கருட பஞ்சமியை யொட்டி நேற்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள கருட பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேப் போன்று, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலிலும் கருட பஞ்சமியொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.