/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
/
அரசு கல்லுாரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 01, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி, கடலுார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள, யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.