sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுார் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

/

 கடலுார் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

 கடலுார் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

 கடலுார் மைதானத்தில் அரசு பொருட்காட்சி அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை


ADDED : டிச 25, 2025 06:04 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நடக்க உள்ள அரசு பொருட்காட்சியையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன், ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், இந்தாண்டிற்கான அரசு பொருட்காட்சி நடக்கிறது. இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகள், கோ-ஆப்டெக்ஸ், ஆவின், மாநகராட்சி, மகளிர் மேம்பாடு துறைகளுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறை மூலம் பொருட்காட்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சீரான பொது போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

உரிய அலுவலர்களுடன் தீயணைப்பு வாகனம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுகாதாரத்துறை மூலம் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மாநகராட்சி மூலம் தினசரி துாய்மை பணிகள் மேற்கொள்ளவும், தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தந்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் மைதானம் வழியாக பஸ்கள் வந்துசெல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் அரசு பொருட்காட்சியினை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ,மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தீபா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us