/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத் தேர்வில் சாதனை அரசு பள்ளிக்கு பாராட்டு
/
பொதுத் தேர்வில் சாதனை அரசு பள்ளிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 26, 2025 11:54 PM

திட்டக்குடி: சிறுமுளை அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக தலைமை ஆசிரியருக்கு கேடயம் வழங்கப்பட்டது.
திட்டக்குடி அடுத்த சிறுமுளை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் துரைபாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 'நடுவில் கொஞ்சம் கற்றலை தேடி' திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினர்.
மேலும், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றமைக்காக முதன்மைக்கல்வி அலுவலர் எல்லப்பன், பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் சான்றிதழ், கேடயம் வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் சிவாஜி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.