sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலியில் மீன் விற்பனை நிலையம் புதிதாக துவக்க அரசு நடவடிக்கை

/

நெய்வேலியில் மீன் விற்பனை நிலையம் புதிதாக துவக்க அரசு நடவடிக்கை

நெய்வேலியில் மீன் விற்பனை நிலையம் புதிதாக துவக்க அரசு நடவடிக்கை

நெய்வேலியில் மீன் விற்பனை நிலையம் புதிதாக துவக்க அரசு நடவடிக்கை


ADDED : ஜூன் 06, 2025 06:39 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நியாயமான விலையில், மக்களுக்கு தரமான மீன்கள் விற்பதற்காக, புதிதாக, 10 மீன் விற்பனை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக மீன்வளத் துறையின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் சார்பில், தற்போது கடலோர மாவட்டங்களில், 12 நிலையங்கள் வாயிலாக, மீன் விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக, 10 இடங்களில், மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடலோரம் அல்லாத மற்ற மாவட்டங்களில், மீன் விற்பனை நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அரியலுார், கடலுார் மாவட்டம் நெய்வேலி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் நான்கு இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தேர்வு செய்யப்பட்ட இடங்களில், கட்டடம் கட்டப்படும். அதில், மீன்வள கூட்டுறவு இணையத்தில் உறுப்பினராக உள்ள மீனவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் இடம் வழங்கி, மீன் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் வாயிலாக, தரமான மீன்கள் வெளிச்சந்தை விலையை விட, குறைந்த மற்றும் நியாயமான விலையில் விற்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us