/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைதீர் நாள் கூட்டம்: 621 மனுக்கள் குவிந்தன
/
குறைதீர் நாள் கூட்டம்: 621 மனுக்கள் குவிந்தன
ADDED : டிச 24, 2024 07:46 AM

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 621 மனுக்கள் குவிந்தது.
இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு 3,200 மதிப்பீட்டில் காதொலி கருவி மற்றும் நேற்று மனு கொடுத்த ஒரு மாற்றுத்திறனாளி பயனாளி மனுவை பரிசீலித்து உடனடியாக 9,300 ரூபாய் மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், முத்திரைத்தாள் துணை கலெக்டர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.