ADDED : பிப் 05, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம், கிழக்குரத வீதியில் உள்ள கலிகம்ப நாயனார் மடாலயக் கோவிலில் குருபூஜை விழா நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் திருமுறை பாராயணம், 9:30 மணியளவில் யாக பூஜை, பகல் 11:00 மணியளவில் கலிகம்ப நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம், 1;00 மணியளவில் மகேஸ்வர பூஜை, அடியார் திரு அமுது ஏற்றல், 1:30 மணியளவில் மகாதீபாராதனை நடந்தது. துளசி மாலை அலங்காரத்தில் கலிகம்ப நாயனார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.