ADDED : அக் 22, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் போலீசார் ரெட்டியூர் தொட்டி மதகு அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில், குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் குச்சூர் மணிகண்டன், 48; அவரது நண்பர் மாரிமுத்து, 36 என தெரிய வந்தது.
குட்கா பொருட்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.