/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கைத்தறி கண்காட்சி கடலுாரில் துவக்கம்
/
கைத்தறி கண்காட்சி கடலுாரில் துவக்கம்
ADDED : ஜன 05, 2025 06:53 AM

கடலுார் : கடலுாரில் கலாேஷத்ரா கைத்தறி பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது.
கலாேஷத்ரா கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கடலுார்-நெல்லிக்குப்பம் சாலை சுபலட்சுமி திருமண மகாலில் கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது.கண்காட்சியில் பெங்கால் காட்டன் சேலை, மதுரை சுங்கடி சேலை, இக்கட் அஜ்ரக், காதி லக்னோ சிக்கன் ஒர்க் டாப்ஸ் வகைகள், ஜெய்ப்பூர், குஜராத் காட்டன் சேலைகள், நைட்டிகள், குர்தீஸ் வகைகள், ஜெய்ப்பூர், அரியானா மெத்தை விரிப்புகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,குழந்தைகளுக்கான காக்ரசோலி, ஸ்கர்ட் மற்றும் ஐம்பொன் நகைகள், ஸ்படிக மாலைகள், கருங்காலி மாலைகள், பித்தளை விளக்கு, சிலைகள், மர பொம்மைகள், மைசூர் பத்திகள் விற்பனைக்கு உள்ளன.விழாக்கால சலுகையாக 10 முதல், 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
காலை 9:30 மணி முதல், இரவு 9:30 மணி வரை விற்பனை நடக்கிறது. கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு 9751943746 என்ற மொபைல் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.