sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் கடும் பனிப்பொழிவு

/

கடலுாரில் கடும் பனிப்பொழிவு

கடலுாரில் கடும் பனிப்பொழிவு

கடலுாரில் கடும் பனிப்பொழிவு


ADDED : பிப் 03, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நேற்று வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இரவு 8:00 மணியளவில் துவங்கும் பனிப்பொழிவின் தாக்கம் காலை 8:00 மணி வரை நீடிக்கிறது.

அதிலும் நேற்று கடலுாரில் வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றனர்.

காலை 9:00 மணிக்குமேல் சூரிய ஒளி வந்த பிறகே, பனிப்பொழிவு படிப்படியாக குறைந்து, சகஜ நிலை திரும்பியது. இந்த கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கடலுார் மட்டுமின்றி விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நேற்று பனிப்பொழிவு அதிகம் இருந்தது.






      Dinamalar
      Follow us