/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
/
கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
கடலுார் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
ADDED : நவ 30, 2024 04:54 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்றுள்ளது. இதற்கு 'பெஞ்சல்' என பெயரிடப்பட்டுள்ளது. புயல் இன்று (30ம் தேதி) பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (30ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.