sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தீ வைத்து எரித்த கணவரும் படுகாயம்

/

மனைவியை தீ வைத்து எரித்த கணவரும் படுகாயம்

மனைவியை தீ வைத்து எரித்த கணவரும் படுகாயம்

மனைவியை தீ வைத்து எரித்த கணவரும் படுகாயம்


ADDED : ஏப் 27, 2025 03:19 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகில் கணவர் தீ வைத்து எரித்ததில், மனைவி பலத்த தீக்காயமடைந்தார். அவர் கட்டிப்பிடித்ததால் கணவரும் காயமடைந்தார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலப்பழஞ்சநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா, 24; திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த விக்னேஷ், பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை, சினேகா மீது ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சியடைந்த சினேகா, கணவரை கட்டிப்பிடித்தார். இதில், அவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.

சினேகாவின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், விக்னேஷிற்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆபத்தான நிலையில், சினேகாவிற்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us