/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனைவி கத்தியால் குத்தி கொலை தலைமறைவான கணவருக்கு வலை
/
மனைவி கத்தியால் குத்தி கொலை தலைமறைவான கணவருக்கு வலை
மனைவி கத்தியால் குத்தி கொலை தலைமறைவான கணவருக்கு வலை
மனைவி கத்தியால் குத்தி கொலை தலைமறைவான கணவருக்கு வலை
ADDED : ஜூன் 20, 2025 12:33 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநெல்லிக்கொல்லை ஆசாரி தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை,57; இவரது மனைவி அமுதா,51; இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் ,இளைய மகன் இறந்துவிட்டார். தற்போது ராஜா,26: என்ற மகனும், மீனா,21; என்ற மகளும் உள்ளனர். அண்ணாதுரைக்கும் அமுதாவிற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ராஜாவுக்கு குள்ளஞ்சாவடியில் திருமணம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கறிவிருந்து நடந்துள்ளது. குள்ளஞ்சாவடியிலிருந்து புறப்பட்ட அமுதா தனது மாமியாரை அழைத்துகொண்டு ஆட்டோவில் பெரியநெல்லிக்கொல்லையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 10.00 மணியளவில் அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணாதுரை வீட்டில் இருந்த கத்தியால் அமுதாவின் முகத்தில் சரமாரியாக குத்து கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவானார்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அழுதாவின் மகன் ராஜா புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அண்ணாதுரை தேடி வருகின்றனர்.