ADDED : நவ 19, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: கணவர் காணவில்லை என மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பண்ருட்டி, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அமர்நாத், 26; இவர் வாணியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்துாரி, 24; இந்த தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அமர்நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் கஸ்துாரி புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து அமர்நாத்தை தேடி வருகின்றனர்.

