/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமநத்தம் கூட்டுரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
ராமநத்தம் கூட்டுரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : நவ 08, 2024 05:49 AM
ராமநத்தம்: ராமநத்தம் கூட்டுரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னை - திருச்சி, ராமநத்தம் - விருத்தாசலம், ராமநத்தம் - ஆத்துார் சாலைகள் இணையும் இடத்தில் ராமநத்தம் உள்ளது. ராமநத்தம் கூட்டுரோட்டில் பஸ் நிலையம், போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். ராமநத்தம் கூட்டுரோட்டில் சென்னை, ஆத்துார் மார்க்க பஸ் நிறுத்தங்களில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்குள்ள நிழற் கூடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சாலையில் நின்றும், பஸ்களும் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். வணிக வளாகங்களுக்கு வருவோர் தங்களது வாகனங்கள் சாலையில் நிறுத்துகின்றனர். வாரச்சந்தை வளாகம் இல்லாததால் வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, ராமநத்தம் கூட்டுரோட்டிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.