/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
/
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு பேரணி
ADDED : ஜன 22, 2025 11:29 PM
கடலுார்:
கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இந்திய ராணுவம் பிப்ரவரி 5 ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆட்சேர்ப்பு பணி நடத்துகிறது.
அக்னிவீர் டெக்னிக்கல் (அனைத்து ஆயுதங்கள்), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10வது தேர்ச்சி (அனைத்து ஆயுதங்கள்) அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8 வது தேர்ச்சி (ஹவுஸ் கீப்பர் , மெஸ் கீப்பர்) (அனைத்து ஆயுதங்கள்), சிப்பாய் பார்மசி மற்றும் சோல்ஐர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டென்ட் (கால்நடை) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் இந்த ஆள்சேர்க்கும் பணிக்கு அந்தந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் தகுதி அளவுகோல்களின்படி பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic ல் பதிவேற்றியபடி அந்தந்த அறிவிப்பில் கூறியுள்ளபடி அனைத்து ஆவணங்களையும் கட்டாயம் கொண்டுவரவேண்டும். ஆவணங்களின் குறித்து அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.
முழுமையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது தவறான வடிவத்தில் ஆள்சேர்ப்பு இடத்திற்கு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கடின உழைப்பு மற்றும் தயாரிப்பு மட்டுமே தகுதிக்கு ஏற்ப அவர்களின் தேர்வை உறுதி செய்யும். விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, அத்தகைய முகவர்கள், ஏஜென்சிகளை நம்பவேண்டாம் என கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.