/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
/
பெண்ணாடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
பெண்ணாடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
பெண்ணாடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2024 05:04 AM
பெண்ணாடம், : பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல மா.கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
பெண்ணாடத்தில் மா.கம்யூ., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, வட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.
வட்டக்குழு உறுப்பினர்கள் பன்னீர், முத்துலட்சுமி, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். தாழநல்லுார் ரயில் நிலையத்தில் மதுரை - விழுப்புரம் விரைவு பாசஞ்சர் ரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் மாதம் 12ம்தேதி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது.
பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.