ADDED : ஏப் 18, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நாகராஜன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியும், கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வழக்குகளை நடத்தி முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், நல்லதுரை, ரகுபதி, மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்கு நடத்துமை துணை இயக்குனர், அரசு வழக்குறிஞர்கள் கலந்து கொண்டனர்.