/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை
/
பொதுமக்கள் குறைகேட்பு 355 மனுக்கள் மீது விசாரணை
ADDED : நவ 25, 2025 05:17 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின், கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தினர்.
பொதுமக்களிடம் 335 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா 11,500 ரூபாய் வீதம் மொத்தம் 34,500 ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா உட்பட பலர் பங்கேற்றனர்.

