ADDED : டிச 13, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: விவசாயிகளுக்கு மானியவிலையில் வழங்கும் இடுபொருட்களை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த அண்ணாகிராமம் வட்டாரத்தில் நடக்கும் வேளாண்மை திட்டங்களை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கதிரேசன் ஆய்வு செய்தனர்.
தேசிய உணவு எண்ணெய் இயக்கத்தில் மணிலா மற்றும் மானிய விலை இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர். ரபி பருவத்திற்கான டிஜிட்டல் பயிர் கணக் கெடுப்பை ஆய்வு செய்து வரும், 25 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டனர். அப்போது உதவி இயக்குனர் சுரேஷ், அலுவலர்கள் விஜய், முத்துராமன், கோபாலகிருஷ்ணன், வீராசாமி உடனிருந்தனர்.

