/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி
ADDED : நவ 21, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை,: புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சி தொடக்க விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கி, பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கராத்தே சீருடை வழங்கினார். 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் பனிமொழி, ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ஆசிரியர் செயலாளர் கண்ணன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.