ADDED : ஆக 07, 2025 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் தெற்கு வீதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டடது.
தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், இன்ஜினியர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் மணிகண்டன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், ரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடக்கு மெயின்ரோட்டில் பாலசுப்ரமணியன், தில்லை நகரில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், பஸ் ஸ்டாண்டில் இளைஞரணி அமைப்பாளர் அருள் அன்னதானம் வழங்கினர்.