sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாழ்வான மின்கம்பிகளால் கோழியூர் விவசாயிகள் அச்சம்

/

தாழ்வான மின்கம்பிகளால் கோழியூர் விவசாயிகள் அச்சம்

தாழ்வான மின்கம்பிகளால் கோழியூர் விவசாயிகள் அச்சம்

தாழ்வான மின்கம்பிகளால் கோழியூர் விவசாயிகள் அச்சம்


ADDED : ஜூலை 13, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அருகே விளை நிலங்களின் மீது தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

திட்டக்குடி அடுத்த கோழியூர்- கோடங்குடி சாலையோரமுள்ள விளை நிலங்களில் கோழியூர், கோடங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

கோழியூர் விளை நிலங்களில் உள்ள மின்கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால் இவ்வழியே செல்லும் மின்கம்பிகள் எட்டி தொடும் அளவிற்கு தாழ்வாகச் சென்றது. மின்கம்பிகளை அகற்றாமல் மின்சாரத்தை மட்டும் மின் ஊழியர்கள் துண்டித்தனர்.

இதனால் வயல்களின் வழியே விவசாய பணிகளுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். மின்கம்பியை அகற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, கோழியூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us