/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
/
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் கோரிக்கை
ADDED : நவ 09, 2025 06:55 AM

நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகத்தை விரைந்து நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில், 1400 ஆண்டுகள் பழமையான ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணிகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.
அதேபோல் நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் என்பதற்கான கல்வெட்டுகளும் கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இங்கு பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் வளாகத்திலேயே பெரிய குளம் உள்ளது. இதில் ஆனி மாத பிரம்மோற்சவத்தின் போது தெப்ப உற்சவம் நடக்கும். இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதற்கு பிறகு நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென்பது ஆகம விதி. இதற்காக திருப்பணிகள் செய்ய ரூ. 41 லட்சமும்,தேர் செய்ய ரூ.43 லட்சமும் அறநிலையத்துறை ஒதுக்கியது.
இதில் தேர் செய்யும் பணிகள் முடிந்து வெள்ளோட்டமும் நடத்தினர். கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகளை கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர். கோவில் கோபுரங்கள் பணி முடிந்து 'பெயிண்டிங்' வேலையும் முடிந்தது. அப்போது தான் கோவிலின் மகா மண்டபத்தில் கருங்கல் துாண்களில் விரிசல் இருப்பதை பார்த்தனர்.
பழமையான கோவில் என்பதால் தொல்லியல் துறையில் அனுமதி பெற்றே, மகா மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.
இதற்கான அனுமதி கிடைக்க கால தாமதமானதால், அந்த பணியை செய்ய முடியவில்லை. தற்போது தான் அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமாக 30 ஏக்கர் நிலம் இருந்தும் திருப்பணியை முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள், மகா மண்டபம் பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

