/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முனியனார் கோவிலில் 9 ம் தேதி லட்சதீபம்
/
முனியனார் கோவிலில் 9 ம் தேதி லட்சதீபம்
ADDED : பிப் 05, 2024 03:58 AM
புதுச்சத்திரம் : சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் வரும் 9 ம் தேதி, 78 வது ஆண்டு லட்சதீப திருவிழாநடக்கிறது.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை முனியனார் கோவிலில் ஆண்டுதோறும், தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமை லட்சதீப திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 78 வது ஆண்டு லட்சதீப திருவிழா வரும் 9 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கோவிலைச் சுற்றிதீபம் ஏற்றுவதற்காக, அகல் விளக்குகள் தூய்மை செய்யும் பணியும், அகல் விளக்குகள் வைப்பதற்கு கோவிலைச் சுற்றிலும் மண்மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
லட்சதீப திருவிழா அன்று காலை 10.00 மணிக்கு முனியனார்,அய்யனார், விநாயகர், பொன்னியம்மன், நல்லநாயகி சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு அலங்கார காவடியுடன்,கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, 6.00 மணிக்கு தீபங்கள் ஏற்றி லட்சதீப திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.

