sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

'கூரியர்' வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 18, 2025 05:15 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: 'கூரியர்' என எழுதப்பட்ட வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.கொல்லத்தங்குறிச்சி கிராமத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு 'கூரியர்' என எழுதப்பட்ட (டிஎன்45- பிஆர்1056) பதிவெண் கொண்ட டாடா பிக்கப் வேனில் வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில், போலீசார் பெ.கொல்லத்தங் குறிச்சி கிராமத்தில் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேன் டிரைவர் திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தெற்கு சித்தாம்பூர் பாபு, 37; என்பவரிடம் நடத்திய விசாரணையில், அரியலுார், திருச்சி மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைக்கு அரிசி கடத்திச் செல்வதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us