ADDED : நவ 01, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக் மோதி காயமடைந்த அடையாளம் தெரியாத நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த சு.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 27; இவர், கடந்த 25ம் தேதி தனது பைக்கில் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சென்றார்.
வி.குமாரமங்கலம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத ஆண் நபர் மீது, மனோஜ்குமார் ஓட்டிச் சென்ற பைக் மோதியது.
இதில், படுகாயமடைந்த அந்த நபர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
வி.குமாரமங்கலம் வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

