/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ADDED : பிப் 19, 2024 05:40 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மோட்டிவேஷன் டிரஸ்ட்பார் ேஹண்டிகேப்ட் அறக்கட்டளை சார்பில். மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். பொருளாளர் ஜென்மராகிணி அரிமா தலைவர் கந்தசாமி, செயலாளர் நிஜாமுதின், பொருளாளர் சேகர், மாவட்டத் தலைவர்கள் ஸ்ரீதர், ரவிசங்கர், ஜெயசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

