நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுாரில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி பிம்ஸ், கருணை யின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமிற்கு, அற்புதராஜ் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், பொது மற்றும் கண்புரை, நீர் அழுத்தம் உள்ளிட்ட பார்வை குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது.
இளைஞர் காங்., பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் ராவணன், பேரூர் தலைவர் வேல்முருகன் உடனிருந்தனர்.

