ADDED : ஜன 09, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த வடுகப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் சாந்தி,32. திருமணமாகி, விவாகரத்தானவர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், நேற்று முன்தினம் தனது சகோதரியுடன் திருவந்திபுரம் கோவிலுக்கு சென்றுள்ளார். மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையம் வந்தவரை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அவரது சகோதரி அளித்த புகாரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

